பெலியத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கைது





பெலியத்த நுழைவு பகுதியில் கடந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் 23 மற்றும் 33 வயதுகளையுடைய இரண்டு பெண்களே ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளை கராப்பிட்டி பகுதியில் இருந்து பூஸ்ஸ பகுதிக்கு உந்துருளியில் கடத்தி சென்றிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதுவரை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe