பெண் பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த கோர விபத்து



மீரிகம - பஸ்யால வீதியின் துமுன்னேகெதர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இவ்விபத்தில், வரகாபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.


அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பெண் பொலிஸ் அதிகாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe