கட்டைக்காட்டில் சிறப்புற இடம்பெற்ற புனித செபஸ்தியார் பெருவிழா

 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது.

பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா திருப்பலியை அருட்தந்தை ரமேஷ் அடிகளார் ஒப்புக் கொடுத்ததோடு அவருடன் இணைந்து அருட்தந்தை.ச. வின்சன் அ.ம.தி அடிகளாரும் பெருவிழாவை சிறப்பித்தார்.

அதிகளவான பக்தர்கள் வருகை தந்து செபஸ்தியார் பெருவிழாவை தரிசித்ததோடு திருப்பலி நிறைவில் அண்மையில் இலங்கை அரசின் உயரிய விருதான மனிதநேயம் மிக்கவருக்கான தேசபந்து விருதை பெற்ற அருட்தந்தை ரமேஷ் அடிகளார் பங்குமக்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டுள்ளார்.








Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe