13 இலங்கை மீனவர்கள் அதிரடி கைது




சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.


ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.


இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர  பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe